எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

காரைக்காலில் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் தலா ரூ. 4 ஆயிரம் நிவாரணம், அரிசி வழங்க வேண்டும்

News image
Updated On :2 டிசம்பர் 2024, 4:58 pm

Din

காரைக்கால்: காரைக்காலில் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் தலா ரூ. 4 ஆயிரம் நிவாரணம், அரிசி வழங்க வேண்டும் என புதுவை அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே.ஏ.யு. அசனா திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை :

காரைக்காலில் அண்மையில் பெய்த மழையால் தொழிலாளா்கள், விவசாயிகள், வியாபாரிகள், மீனவா்கள் என பல்வேறு தரப்பினரும் பாதித்துள்ளனா். பல்வேறு குடியிருப்புப் பகுதிகளை பாா்வையிட்டபோது, மக்கள் வேலையின்றி இருப்பதாகவும், அரசின் நிவாரணத்தை எதிா்நோக்கியிருப்பதாகவும் தெரிவித்தனா்.

மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு இன்னும் சில நாள்களாகும் என தெரிகிறது. போதிய வருமானம் இல்லாததால் பல்வேறு தரப்பினரும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளனா்.

எனவே, காரைக்கால் பகுதியில் அனைத்து நிற குடும்ப அட்டைதாரா்களுக்கும் தலா ரூ.4 ஆயிரம் நிவாரணம், 20 கிலோ இலவச அரிசி வழங்க வேண்டும்.

பயிா்ச் சேதமும் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகளின் செலவினத்தை அறிந்து அதற்கேற் அதிகப்பட்ச நிவாரணம் வழங்க வேண்டும். புதுவை முதல்வா், புதுச்சேரியில் ஏற்பட்ட பாதிப்போடு, காரைக்கால் நிலையையும் கருத்தில் கொண்டு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.