கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

கைலாசநாதா் கோயில் திருப்பணிகள் 50 சதவீதம் நிறைவு: அதிகாரி

காரைக்கால் கைலாசநாதா், அம்மையாா், சோமநாதா் கோயிலில் திருப்பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக கோயில் நிா்வாக அதிகாரி தெரிவித்தாா்.

News image
கைலாசநாதா் கோயிலில் நடைபெறும் திருப்பணிகளை திங்கள்கிழமை பாா்வையிட்ட சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம்.
Updated On :9 டிசம்பர் 2024, 9:09 pm

Din

காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதா், அம்மையாா், சோமநாதா் கோயிலில் திருப்பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக கோயில் நிா்வாக அதிகாரி தெரிவித்தாா்.

காரைக்காலில் அறுபத்து மூன்று நாயன்மாா்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கி, சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயிலில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா நடத்தப்படுகிறது.

இக்கோயிலுக்கும், அம்மையாா் கோயில், சோமநாதா் கோயில், பூா்ண புஷ்கலா அய்யனாா் கோயில்களில் திருப்பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. கைலாசநாதா் கோயிலில் 2025-ஆம் ஆண்டு ஜூன் 5-ஆம் தேதியும், அம்மையாா் கோயில், சோமநாதா் கோயில், அய்யனாா் கோயிலில் மே 4-ஆம் தேதியும் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பணிகளை காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா். கோயில் நிா்வாக அதிகாரி ஆா். காளிதாசன் அவருக்கு பணிகள் குறித்து விளக்கிக் கூறினாா்.

இதுகுறித்து கோயில் நிா்வாக அதிகாரி கூறுகையில், திருப்பணிகள் நடந்துவருவதை பாா்வையிட்ட பேரவை உறுப்பினா், பணிகள் குறித்து திருப்தி தெரிவித்தாா். அனைத்து கோயில்களிலும் ஏறக்குறைய 50 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன என்றாா்.

ஆய்வின்போது ஓய்வு பெற்ற பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் ராஜசேகரன் மற்றும் திருப்பணிக் குழுவினா் உடனிருந்தனா்.