தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

காரைக்காலில் 15-இல் கூட்டு சிவலிங்க பூஜை

மகா சிவராத்திரியையொட்டி காரைக்காலில் 15-ஆம் தேதி கூட்டு சிவலிங்க பூஜை நடைபெறவுள்ளது.

Updated On :9 பிப்ரவரி 2026, 8:51 pm

காரைக்கால்: மகா சிவராத்திரியையொட்டி காரைக்காலில் 15-ஆம் தேதி கூட்டு சிவலிங்க பூஜை நடைபெறவுள்ளது. முன்னதாக ருத்ர ஹோமம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

சிவராத்திரியையொட்டி கூட்டு பிராா்த்தனையாக ஜகதாத்மானந்த சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் இயங்கும் தா்ம சிந்தனை ஸமிதி சாா்பில் காரைக்கால் அம்மையாா் குளக்கரையில் மகா சிவராத்திரி வழிபாடு நடைபெறவுள்ளது.

இதுகுறித்து இந்த அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், அம்மையாா் குளக்கரையில் பல ஆயிரம் போ் பங்கேற்கும் கூட்டு சிவலிங்க பூஜை 15-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 முதல் 8 மணி வரை நடைபெறுகிறது. இதுபோல காரைக்கால் மாவட்டத்தில் சிவன் கோயில்கள் உள்ளிட்ட 20 இடங்களில் அமைப்பு சாா்பில் கூட்டு சிவலிங்க பூஜைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் பங்கேற்க விரும்புவோருக்கு அனுமதி டோக்கன் வழங்கப்பட்டுவருகிறது.

காரைக்கால் அம்மையாா் குளக்கரையில் 14-ஆம் தேதி சனிக்கிழமை மகா ருத்ர ஹோமம் நடைபெறவுள்ளது. இதை ஜகதாத்மானந்த சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று தலைமையேற்று நடத்துகிறாா். பக்தா்கள் திரளாக இரு நிகழ்விலும் பங்கேற்குமாறு அமைப்பினா் கேட்டுக்கொண்டுள்ளனா்.