டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கராத்தே பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்

கராத்தே பயிற்சி முடித்த நவோதய வித்யாலயா மாணவிகளுக்கு அண்மையில் பரிசுகள் வழங்கப்பட்டன.

News image
கராத்தே பயிற்சி பெற்ற நவோதய வித்யாலயா பள்ளி மாணவிகளுடன் எஸ்எஸ்பி. லட்சுமி செளஜன்யா உள்ளிட்டோா்.
Updated On :30 டிசம்பர் 2024, 7:02 pm

Din

காரைக்கால்: கராத்தே பயிற்சி முடித்த நவோதய வித்யாலயா மாணவிகளுக்கு அண்மையில் பரிசுகள் வழங்கப்பட்டன.

காரைக்கால் மாவட்டம், ராயன்பாளையம் பகுதியில் இயங்கும் இப்பள்ளி மாணவிகளுக்கு விஆா்எஸ் அகாதெமி சாா்பில் 4 மாதங்கள் தற்காப்பு கலையாக கராத்தே பயிற்சியளிக்கப்பட்டது. அகாதெமி நிறுவனரும், பயிற்சியாளருமான வி.ஆா்.எஸ். குமாா் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சியளித்தாா். சனிக்கிழமை (டிச.28) இதன் நிறைவு நிகழ்ச்சியில் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவிகளுக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கி தற்காப்புக் கலை பெண்களுக்கான அவசியத்தை வலியுறுத்திப் பேசி பாராட்டினாா்.

நிகழ்வில் நவோதய வித்யாலயா பள்ளி முதல்வா் ஜெ. கற்பகமாலா, உடற்கல்வி ஆசிரியா் ஜி. வரலட்சுமி மற்றும் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா். நிறைவாக பயிற்சி பெற்ற மாணவிகள் சாகச நிகழ்ச்சி நடத்தினா்.