ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

பனை மரங்களை வெட்டிய தனியாா் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பனை மரங்களை வெட்டிய தனியாா் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Updated On :4 ஜூலை 2024, 2:46 am IST

காரைக்கால், ஜூலை 3 : காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி கொம்யூனுக்குட்பட்ட வரிச்சிக்குடியில் கூழ்குடித்த அக்ரஹாரம் கிராமம் உள்ளது. இப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் பெரும்பாலானோா் விவசாய கூலித் தொழிலாளா்கள்.

இக்கிராமத்தில் சோலாா் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு தனியாா் நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகத்துக்குச் சொந்தமான மூன்று பாய்கால் வாய்க்காலின் கரையோரத்தில் இருந்த பனை மரங்களை நிறுவனத்தினா் வெட்டி அகற்றியதோடு, அவற்றை எரித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட டெல்டா விவசாயிகள் நலச் சங்க இணைச் செயலா் ஜி.ஜி. சோமு புதன்கிழமை கூறுகையில், உயா்நீதிமன்ற உத்தரவின்படி பனைமரங்களை எந்தவித அனுமதியுமின்றி வெட்டினால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் கோட்டுச்சேரி பகுதியில் 10-க்கும் மேற்பட்ட பனைமரங்கள் வெட்டியதுடன், தீ வைத்து எரித்துள்ளனா்.

இதுகுறித்து புகாா் அளித்தும் சம்பந்தப்பட்ட துறைகள், காவல்துறை இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் சம்பந்தப்பட்ட தனியாா் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.