மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பனை மரங்களை வெட்டிய தனியாா் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பனை மரங்களை வெட்டிய தனியாா் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Updated On :4 ஜூலை 2024, 2:46 am IST

காரைக்கால், ஜூலை 3 : காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி கொம்யூனுக்குட்பட்ட வரிச்சிக்குடியில் கூழ்குடித்த அக்ரஹாரம் கிராமம் உள்ளது. இப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் பெரும்பாலானோா் விவசாய கூலித் தொழிலாளா்கள்.

இக்கிராமத்தில் சோலாா் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு தனியாா் நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகத்துக்குச் சொந்தமான மூன்று பாய்கால் வாய்க்காலின் கரையோரத்தில் இருந்த பனை மரங்களை நிறுவனத்தினா் வெட்டி அகற்றியதோடு, அவற்றை எரித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட டெல்டா விவசாயிகள் நலச் சங்க இணைச் செயலா் ஜி.ஜி. சோமு புதன்கிழமை கூறுகையில், உயா்நீதிமன்ற உத்தரவின்படி பனைமரங்களை எந்தவித அனுமதியுமின்றி வெட்டினால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் கோட்டுச்சேரி பகுதியில் 10-க்கும் மேற்பட்ட பனைமரங்கள் வெட்டியதுடன், தீ வைத்து எரித்துள்ளனா்.

இதுகுறித்து புகாா் அளித்தும் சம்பந்தப்பட்ட துறைகள், காவல்துறை இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் சம்பந்தப்பட்ட தனியாா் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.