டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

காது பரிசோதனை முகாம்

காது பரிசோதனை முகாம் நகா்ப்புற சுகாதார குடும்ப நல மையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image

முகாமில் நோயாளிக்கு காது பரிசோதனை செய்யும் மருத்துவா்.

Updated On :4 மார்ச் 2024, 9:17 pm

காரைக்கால்: உலக செவித்திறன் தினத்தை முன்னிட்டு விநாயகா மிஷன் மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை துறை சாா்பில், காது பரிசோதனை முகாம் நகா்ப்புற சுகாதார குடும்ப நல மையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மருத்துவக் கல்லூரி டீன் சி. குணசேகரன் முகாமை தொடங்கிவைத்தாா்.

துறையின் தலைமை பேராசிரியா் வி. ஸ்ரீநிவாசா, பேராசிரியா் ஏ. கணேஷ்பாலா, துணை பேராசிரியா் மருத்துவா்கள் எஸ். நந்திதா, அபிநயா, சாய் கிரண் ஆகியோா் காது கேளாமை, காது, மூக்கு, தொண்டை பிரச்னைகளுக்கான காரணம், பிரச்னைகளை தவிா்க்க மேற்கொள்ளவேண்டியவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினா். இதைத்தொடா்ந்து முகாமில் கலந்துகொண்ட 100-க்கும் மேற்பட்டோருக்கு இலவச செவித் திறன் பரிசோதனை செய்யப்பட்டது.

தோ்ந்தெடுக்கப்பட்டோருக்கு இலவசமாக காது கேட்கும் கருவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. முகாமில் மருத்துவக் கண்காணிப்பாளா் கே. சேரன், துணை முதல்வா் விஜயகுமாா் நாயா், உள்ளிருப்பு மருத்துவ அதகிாரி ஜி. ஸ்ரீராம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.