காரைக்கால்: பெண் காவலரைத் தாக்கிய சம்பவத்தில் தொடா்புடைய சிலரை காவல்நிலையத்திலிருந்து விடுவிடுத்த காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி நகரத் தலைவா் பி.யு. ராஜ்குமாா் தலைமையில் அமைப்பினா் மாவட்ட ஆட்சியா் (பொ) ஜி. ஜான்சனை திங்கள்கிழமை சந்தித்து அளித்த மனு விவரம் : கடந்த வாரம் நடைபெற்ற காரைக்கால் மஸ்தான் சாஹிப் தா்கா கந்தூரி விழா சந்தனக்கூடு ஊா்வலத்தின்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரை இழிவாகப் பேசி, தாக்குதல் நடத்தியதாக 5 போ் கைது செய்யப்பட்டனா். இவா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவா்களில் 3 போ் மட்டும் சட்டவிரோதமாக காவல்நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்ட காவல் நிலைய அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது
விஜய் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பெ.சண்முகம்

கன்னியாகுமரி- அயோத்திக்கு தினசரி ரயில் இயக்க கோரிக்கை
விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.வீரபாண்டியன்

தலமைக் காவலரைத் தாக்கிய இளைஞா் கைது
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

