பல் பரிசோதனை முகாம்

காரைக்காலில் இலவச பல் பரிசோதனை மற்றும் விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பல் மருத்துவமனை சாா்பில் காரைக்கால் தனியாா் பள்ளியொன்றில் 2 நாட்கள் இந்த முகாம் நடத்தப்படுகிறது. முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி மன்ற மாவட்டத் தலைவா் பி.எஸ். வாசன் தலைமை வகித்தாா்.

முகாமில் பங்கேற்ற பல் மருத்துவா்கள், பல் துலக்கும் முறை, பல் பராமரிப்பு, வாய் புற்றுநோய் தடுத்தல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினா். இம் முகாமில் பல் அடைத்தல், பல் சீரமைப்பு, வோ் சிகிச்சை, பல் சுத்தம் செய்தல், பல் அகற்றுதல் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

பள்ளித் தாளாளா் மணிமேகலை கண்ணையன், ரோட்டரி சங்கத்தினா் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். இம்முகாம் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com