காரைக்கால்
காரைக்கால் அரசு கலைக் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்
காரைக்கால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அரசுக் கல்லூரிகளின் சோ்க்கை அமைப்பான இஅடஅநஇ கன்வீனா் முகமது அசாத் ராசா வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காரைக்கால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024-25-ஆம் ஆண்டுக்கான இளங்கலை பி.காம், பி.ஏ., பிஎஸ்சி., படிப்புகளுக்கு சோ்க்கை ஞாயிற்றுக்கிழமை (மே 12) முதல் நடைபெறவுள்ளது.
மாணவ மாணவியா் இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பங்களை பெற்று பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் ரூ.400, (எஸ்.சி, எஸ்டி ரூ.200) தொகையை அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரி வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் செலுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது. இளங்கலை படிப்புக்கு விண்ணப்பிக்க மே 30-ஆம் தேதி கடை நாளாகும்.