கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 15 புதிய தொழில்நுட்பப் படிப்புகள்!

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 15 புதிய தொழில்நுட்பப் படிப்புகள் அறிமுகம் செய்யப்படுவது குறித்து..

News image
அரசுப் பாலிடெக்னிக் படிப்பு- ENS
Updated On :9 மார்ச் 2026, 7:32 am

இணையதளச் செய்திப் பிரிவு

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப அரசுப் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 15 புதிய தொழில்நுட்பப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

இந்தப் படிப்புகளில் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பாலிடெக்னிக் மாணவர்களும் இணைந்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பாலிடெக்னிக் கல்லூரிகளில் வரும் 2026 - 27ஆம் கல்வியாண்டில், தேர்வு செய்யப்பட்ட மேம்படுத்தப்பட் திறன் சான்றளிப்புப் படிப்புகள் அறிமுகமாகவிருக்கின்றன என்று தொழில்நுட்ப கல்வி இயக்குநர் விசாகன் கூறியுள்ளார்.

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் நவீன தொழில்துறை நடைமுறைகளில் மாணவர்கள் திறன்களைப் பெற உதவும் வகையில் மொத்தம் 15 தொழில்துறை சார்ந்த படிப்புகள் முன்மொழியப்பட்டுள்ளன.

இந்தப் படிப்புகளில் புதுமை மற்றும் வடிவமைப்பு சிந்தனை, தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் மேம்பாடு, தயாரிப்பு சரிபார்ப்பு மற்றும் பகுப்பாய்வு, ஆட்டோமொபைல் பராமரிப்பு, மேம்பட்ட ஆட்டோமொபைல் தொழில்நுட்பம், பேட்டரி மற்றும் மின்சார வாகன தொழில்நுட்பம், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், சிஎன்சி மில்லிங் மெஷின் புரோகிராமிங், சிஎன்சி லேத் புரோகிராமிங், சேர்க்கை உற்பத்தி செயல்முறை மற்றும் தொழில்நுட்பம், வெல்டிங் தொழில்நுட்பம், மேம்பட்ட ஓவியம் தொழில்நுட்பம், செயல்முறை கட்டுப்பாடு மற்றும் ஆட்டோமேஷன், ரோபாட்டிக்ஸ் புரோகிராமிங் - பொருள் கையாளுதல் மற்றும் மேம்பட்ட பிளம்பிங் ஆகியவை அடங்கும்.

இந்தப் படிப்புகள் பாடத்திட்டத்தில் விருப்பப் பாடங்களாகவோ அல்லது கூடுதல் சான்றிதழ் திட்டங்களாகவோ இணைக்கப்படும். இந்தப் பாடங்களில் சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புகள் இரண்டும் வழங்கப்படும்.

இந்த படிப்புகள் மூலம் சுமார் 36 ஆயிரம் மாணவர்கள் ஆண்டுதோறும் பயன்பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த படிப்பில், பாலிடெக்னிக் படித்தவர்கள், ஐடிஐ மாணவர்கள், டிகிரி முடித்தவர்களும் இணைந்து படிக்கலாம். தொழில்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் இந்த படிப்புகளை கற்பிப்பார்கள் என்றும், இதனால், கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

summary

Regarding the introduction of 15 new technical courses in government polytechnic colleges..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.