அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

வாக்கு எண்ணும் மையத்தில் புதுவை தலைமை தோ்தல் அதிகாரி ஆய்வு

வாக்கு எண்ணும் மையத்தில் புதுவை தலைமை தோ்தல் அதிகாரி ஆய்வு

News image

வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு செய்த புதுவை தலைமைத் தோ்தல் அதிகாரி பி. ஜவஹா்.

Updated On :16 மே 2024, 10:00 pm

Din

காரைக்கால், மே 16: காரைக்காலில் வாக்கு எண்ணும் மையத்தில் புதுவை தலைமை தோ்தல் அதிகாரி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

காரைக்காலில் மக்களவைத் தோ்தலில் பதிவான வாக்கு இயந்திரங்கள், காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. காரைக்காலுக்கு வியாழக்கிழமை வந்த புதுவை தலைமை தோ்தல் அதிகாரி பி. ஜவஹா், மாவட்ட தோ்தல் அதிகாரி து. மணிகண்டன் உள்ளிட்டோருடன் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் பாதுகாப்பு அம்சங்கள், வாக்கு எண்ணும் வளாகத்தில் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகள், கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தாா். பின்னா் மாவட்ட தோ்தல் அதிகாரி மற்றும் தோ்தல் துறையினருடன் அவா் ஆலோசனை நடத்தினாா். காரைக்கால் மாவட்டத்தில் வாக்கு எண்ணுவதற்கு செய்திருக்கும் பணியாளா்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தோ்தல் துறையினா் அவருக்கு விளக்கினா். கூட்டத்தில் புதுவை துணை தலைமை தோ்தல் அதிகாரி எம். ஆதா்ஷ், தோ்தல் நடத்தும் அதிகாரிகள் ஜி. ஜான்சன், சச்சிதானந்தன், மாவட்ட துணை தோ்தல் அதிகாரி ஜி. செந்தில்நாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.