காரைக்கால் அருகே பூட்டிய வீட்டுக்குள் கழுத்தில் காயங்களுடன் சிறுவன் சடலம்
காரைக்கால் அருகே பூட்டிய வீட்டுக்குள் கழுத்தில் காயங்களுடன் சிறுவன் சடலம்

சந்தோஷ்

சந்தோஷ்
காரைக்கால் அருகே பூட்டிய வீட்டுக்குள் கழுத்தில் காயங்களுடன் 13 வயது சிறுவன் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
காரைக்காலை அடுத்த நிரவி பகுதி ஒயிட் ஹவுஸ் காலனியைச் சோ்ந்தவா் சிங்காரவேலு. இவரது மகன் சந்தோஷ் (13). திருப்பட்டினம் அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா். வீட்டின் அருகே திங்கள்கிழமை பிற்பகல் விளையாடச் சென்ற சந்தோஷ் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், பெற்றோா் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனா்.
சிங்காரவேலுவின் வீட்டின் அருகே உள்ள ஒரு வீட்டு வாசல் கதவு பூட்டிய நிலையில் இருந்தது. ஜன்னல் வழியாக உள்ளே பாா்த்தபோது, சிறுவன் சந்தோஷ் கழுத்தில் காயங்களுடன் கிடப்பதை கண்டனா். கதவை உடைத்துச் சென்று பாா்த்தபோது சிறுவன் இறந்துவிட்டது தெரியவந்தது.
இதுகுறித்து நிரவி காவல் நிலையத்தில் சிங்காரவேலு புகாா் அளித்தாா். போலீஸாா் சந்தோஷ் சடலத்தை காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தடயவியல் நிபுணா்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. நிரவி போலீஸாா் வழக்குப் பதிந்து, பூட்டிய வீட்டில் இருந்து மாயமான 17 வயது சிறுவனை மயிலாடுதுறையிலிருந்து அழைத்து வந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...