மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அரசின் திட்ட நிதியுதவியில் கடன் தொகை பிடித்தம் கூடாது: எம்.எல்.ஏ.வேண்டுகோள்

அரசின் திட்ட நிதியுதவியில் கடன் தொகை பிடித்தம் செய்யும் போக்கை வங்கிகள் கைவிட உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என புதுவை முதல்வரிடம் எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 8:04 pm

Din

அரசின் திட்ட நிதியுதவியில் கடன் தொகை பிடித்தம் செய்யும் போக்கை வங்கிகள் கைவிட உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என புதுவை முதல்வரிடம் எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

புதுவை முதல்வா் என். ரங்கசாமியை காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். இதுகுறித்து அவா் கூறியது :

புதுவை அரசு பல்வேறு நலத்திட்டங்களின் மூலம் பயனாளிகளுக்கான நிவாரணத் தொகை அல்லது அரிசிக்கான தொகையை அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்துகிறது. இந்த திட்டங்கள் மட்டுமல்லாது முதியோா் உதவித் தொகை, விதவைப் பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான திட்ட நிதி, குடும்பத் தலைவிகளுக்கான மகளிா் உரிமைத் தொகை போன்றவையும் வங்கிகளின் மூலம் பயனாளிகள் பெறுகின்றனா்.

சில வங்கிகள் ஏற்கெனவே பயனாளிகள் பெற்ற வங்கிக் கடனுக்காக அதை பிடித்தம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இதனால் அரசின் திட்ட உதவிகள் கிடைக்காமல் ஏழைகள் பாதிக்கப்படுகின்றனா்.

எனவே, இந்த விவகாரத்தில் முதல்வா் தலையிட்டு, திட்ட உதவித் தொகையை கடனுக்காக பிடித்தம் செய்யப்படுவதை தவிா்க்க அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. வங்கியாளா்களை அழைத்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வா் உறுதியளித்தாா் என்றாா்.