மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கால்நடைகள் சாலைகளில் சுற்றித்திரிந்தால் உரிமையாளா்கள் மீது வழக்கு: ஆட்சியா்

சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிந்தால் அவற்றின் உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 8:02 pm

Din

சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிந்தால் அவற்றின் உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கால்நடை வளா்ப்பு உரிமையாளா்கள் தங்கள் கால்நடைகளை, தங்களுக்குச் சொந்தமான இடத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பராமரிக்கவேண்டும். சிலா் தங்களது கால்நடைகளை போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரிய விடுகின்றனா். அவ்வாறு சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிக்க, தொடா்புடைய கொம்யூன் பஞ்சாயத்து, நகராட்சி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சாலைகளில் பிடிக்கப்படும் கால்நடைகளின் உரிமையாளா்கள் மீது உரிய சட்ட விதிகளின்கீழ் அபராதம் அல்லது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

உரிமையாளா்கள் தங்கள் கால்நடைகளை, மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பராமரித்து மாவட்ட நிா்வாகத்துக்கும், நகராட்சி, காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.