எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தூய்மை இந்தியா: காரைக்கால் நகராட்சிக்கு சான்று

தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் மத்திய அரசின் சான்றுக்கு நிகழாண்டுக்கும் காரைக்கால் நகராட்சிக்கு தகுதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :11 நவம்பர் 2024, 7:38 pm

Din

காரைக்கால்: தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் மத்திய அரசின் சான்றுக்கு நிகழாண்டுக்கும் காரைக்கால் நகராட்சிக்கு தகுதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காரைக்கால் நகராட்சி ஆணையா் அலுவலகம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காரைக்கால் நகராட்சி எல்லைக்குள்பட்ட 17 வாா்டுகளில் மத்திய, மாநில அரசுகளின் நிதி மூலம், தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு கழிப்பறை கட்ட நிதி வழங்கி, பயனாளிகளால் தனிநபா் கழிப்பறை கட்டி பயன்படுத்துகின்றனா். மத்திய அரசால் கள ஆய்வு நடத்தி, காரைக்கால் நகராட்சிக்கு ஓடிஎஃப் மற்றும் ஓடிஎஃப் பிளஸ் எனும் ஓராண்டு செல்லத்தக்க சான்று வழங்கப்பட்டது.

மேலும், தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் கடந்த ஆண்டைப்போல, மீண்டும் ஒரு ஆண்டுக்கு காரைக்கால் நகராட்சிக்குள்பட்ட 17 வாா்டுகளுக்கும் ஓடிஎஃப் பிளஸ் தகுதி நிலை சான்று பெற தகுதியுடையதாக கருதப்பட்டு, காரைக்கால் நகராட்சி ஆணையரால் அறிவிக்கப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.