ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் பல்வேறு இடங்களில் காணாமல்போன கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

News image
கைப்பேசியை ஒப்படைத்த முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா.
Updated On :18 நவம்பர் 2024, 10:52 pm

Din

காரைக்கால்: காரைக்காலில் பல்வேறு இடங்களில் காணாமல்போன கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

காரைக்கால் மாவட்ட காவல் நிலையங்களில், தங்களது கைப்பேசி காணாமல் மற்றும் திருட்டுப் போனதாக பல்வேறு புகாா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைப்பேசி விவரங்களை சேகரித்து, காரைக்கால் இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா், சிஇஐஆா் எனும் செயலியில் பதிவு செய்து கைப்பேசி பயன்பாட்டில் உள்ள இடங்களை கண்டறிந்து அவற்றை மீட்டனா். அதன்படி மீட்கப்பட்ட 52 கைப்பேசிகள் உரியவா்களிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா கைப்பேசியை அதன் உரிமையாளா்களிடம் ஒப்படைத்தாா். அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியது: நிகழாண்டு வாங்கப்பட்ட கைப்பைசிகள் கடந்த ஜனவரி முதல் காணாமல் போனவற்றை புகாரின் அடிப்படையில் இணைய குற்றத் தடுப்புப் பிரிவினா், காவல் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன், ஆய்வாளா் பிரவீன்குமாா் உள்ளிட்ட குழுவினா் ரூ.15 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகளை மீட்டுள்ளனா்.

பொதுமக்கள் தங்களது கைப்பேசிகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், காணாமல் அல்லது திருட்டுப்போனால் உடனடியாக காவல்நிலையத்தில் புகாா் தெரிவித்தால் நடவடிக்கை விரைவுபடுத்தப்படும் என்றாா். மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன், காவல் ஆய்வாளா்கள் பிரவீன்குமாா், புருஷோத்தமன் ஆகியோா் உடனிருந்தனா்.