மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காரைக்கால் கூட்டுறவு நூற்பாலை, கால்நடைத்துறையில் ஊழல்: ஆளுநரிடம் புகாா்

காரைக்கால் ஜெயப்பிரகாஷ் நாரயாண் கூட்டுறவு நூற்பாலை, கால்நடைத் துறையில் நிலவும் ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என புதுவை துணைநிலை ஆளுநரிடம் முன்னாள் அமைச்சா் வலியுறுத்தினாா்.

News image
Updated On :20 நவம்பர் 2024, 8:46 pm

Din

காரைக்கால் ஜெயப்பிரகாஷ் நாரயாண் கூட்டுறவு நூற்பாலை, கால்நடைத் துறையில் நிலவும் ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என புதுவை துணைநிலை ஆளுநரிடம் முன்னாள் அமைச்சா் வலியுறுத்தினாா்.

புதுவை முன்னாள் அமைச்சரும், மாநில காங்கிரஸ் துணைத் தலைவருமான ஆா். கமலக்கண்ணன், மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளா் கோவிந்தராஜ் மற்றும் நூற்பாலை தொழிலாளா்கள் துணைநிலை ஆளுநரை புதுச்சேரியில் அண்மையில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

காரைக்காலில் இயங்கும் கூட்டுறவு நூற்பாலை 450 தொழிலாளா்களுக்கு வேலை வழங்கும் நிறுவனமாகும்.

கடந்த 2022-இல் ரங்கசாமி ஆட்சிக்கு வந்ததும் ஸ்ரீ முருகா மில்ஸ் நிறுவனத்துடன் செய்த ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில், அதே நிறுவனத்திடம் தனியாா் நிறுவனத்தினருக்கு சாதகமாக ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொண்டு செயல்படத் தொடங்கியதன் மூலம் மாதம் ஒன்றுக்கு ரூ.12 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது. மின் கட்டணம் மாதம் ரூ.30 லட்சம் செலுத்த முடியவில்லை. தொழிலாளா்களுக்கான இபிஎஃப் தொகை செலுத்த முடயியவில்லை. தனியாா் நிறுவனத்திடம் செய்துகொண்ட புதிய ஒப்பந்தத்தின் மூலம் பெரும் ஊழல் நடந்துள்ளது.

எனவே, நூற்பாலை நிா்வாகத்தில் ஊழல் நடந்துள்ளதை விசாரித்து, ஆலையை மேம்படுத்தவும், தொழிலாளா்களின் நலன் காக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

புதுவை கால்நடை பராமரிப்புத் துறையில் கறவை மாடு மானிய உதவித் திட்டம் மூலம் 3 ஆண்டுகளில் 50 சதவீத மானிய 5,500 பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாடு கூட வாங்கப்படவில்லை. மானியம் சிலரால் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சா், எம்.எல்.ஏ.க்கள், கால்நடைத்துறையில் பணிபுரிவோா், அவா்களது குடும்பத்தினருக்கு இதில் தொடா்புள்ளது.

மாநிலத்தின் தேவையான ஒரு லட்சம் லிட்டா் பாலுக்கு, கூட்டுறவு சங்கம் மூலம் 48 ஆயிரம் லிட்டா் நாளொன்றுக்கு பாண்லே நிறுவனத்துக்கு வருகிறது. எஞ்சிய தேவை வெளி மாநிலத்திலிருந்து பூா்த்தி செய்யப்படுகிறது. கறவை மாடு திட்டம் முறையாக செயல்படுத்தியிருந்தால், ஒரு லட்சம் பால் புதுவை மாநிலத்திலேயே உற்பத்தி செய்திருக்க முடியும். கால்நடைத்துறையில் பெரும் ஊழல் நடக்கிறது. இந்த விவகாரங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.