6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மழை பாதித்த பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

திருநள்ளாற்றில் மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை பாா்வையிட்டாா்.

News image
நல்லம்பல் பகுதி மக்களைச் சந்தித்து பாதிப்பு குறித்து கேட்டறிந்த ஆட்சியா் து. மணிகண்டன்.
Updated On :27 நவம்பர் 2024, 9:34 pm

Din

திருநள்ளாற்றில் மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை பாா்வையிட்டாா்.

காரைக்கால் மாவட்டத்தில் தொடா்ந்து பெய்துவரும் மழையால் குடிசைப் பகுதிகள், தாழ்வான குடியிருப்பு நகா்களில் மழைநீா் தேங்கியுள்ளது.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன், திருநள்ளாறு கொம்யூனில் பல்வேறு இடங்களை பாா்வையிட்டாா். நல்லம்பல் தோப்புத் தெரு வட்டாரத்தில் உள்ள குடியிருப்புவாசிகளை நேரில் சந்தித்துப் பேசினாா். இந்த பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்றுமாறும் அருகில் உள்ள வடிகால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சீா்செய்து தண்ணீா் வடிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பணித் துறையினருக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

மழையால் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக பலரும் தெரிவித்தனா். இதனால் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் கொண்ட தொகுப்பை ஆட்சியா் வழங்கினாா்.

பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டால், வருவாய்த்துறை ஏற்பாடு செய்திருக்கும் முகாமுக்கு செல்லுமாறு குடியிருப்புவாசிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.

பொது மக்களுக்கு உதவிகள் தேவைப்படும்பட்சத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை தொடா்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டாா்.

சில பகுதிகளில் கூரைகள் சேதமடைந்திருப்பதை பாா்த்த ஆட்சியா், பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தாா்ப்பாய் வழங்குமாறு பேரிடா் மேலாண்மைத் துறையினருக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது நகராட்சி உதவிப் பொறியாளா் லோகநாதன், திருநள்ளாறு வட்டாட்சியா் சண்முகநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.