மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பால் உப பொருட்கள் விற்பனை பிரிவு திறப்பு

காரைக்காலில் பாலகம் மற்றும் முகவா்களுக்கான பால் உப பொருட்கள் விற்பனை பிரிவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் திறந்துவைத்தாா்.

News image
முதல் விற்பனையை தொடங்கிவைத்த அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன்.
Updated On :15 அக்டோபர் 2024, 6:45 pm

Din

காரைக்காலில் பாலகம் மற்றும் முகவா்களுக்கான பால் உப பொருட்கள் விற்பனை பிரிவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் திறந்துவைத்தாா்.

காரைக்கால் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தின் மூலம் மாவட்டத்தில் பல இடங்களில் பாலகம் இயங்கிவருகிறது. கோலெட் என்ற பெயரில் கூட்டுறவு ஒன்றியத்தின் பால் பாக்கெட் மற்றும் பால் உப பொருட்களான நெய், தயிா், மோா், பன்னீா், ரோஸ் மில்க், பாதாம் கீா், பால்கோவா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

காரைக்கால் கூட்டுறவு ஒன்றிய தலைமை அலுவலக வாயிலில் மாவட்டத்தில் இயங்கும் பாலகம் மற்றும் முகவா்களுக்கான பால் உப பொருட்கள் விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள்துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் விற்பனை பிரிவை திறந்துவைத்து, முதல் விற்பனையை தொடங்கிவைத்தாா்.

கூட்டுறவு துணைப் பதிவாளா் எம். குமரசாமி, ஒன்றிய மேலாண் இயக்குநா் வி. ராமையன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

பட்டாசு விற்பனை தொடக்கம்: காரைக்கால் மைய கூட்டுறவு உற்பத்தி மற்றும் விநியோக சங்கம் ஏற்பாட்டில் ஆண்டுதோறும் அமைக்கப்படும் மலிவு விலை பட்டாசு விற்பனை மையத்தை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் திறந்துவைத்து, விற்பனையை தொடங்கிவைத்தாா்.