மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காரைக்காலில் குறுவை சாகுபடி அறுவடை நிறைவு

காரைக்காலில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் எஞ்சியிருந்த பகுதிகளில் அறுவடைப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனா்.

News image
பிள்ளைத் தெருவாசல் பகுதியில் நடைபெற்ற குறுவை நெற்பயிா் அறுவடை.
Updated On :16 அக்டோபர் 2024, 8:04 pm

Din

காரைக்காலில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் எஞ்சியிருந்த பகுதிகளில் அறுவடைப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனா்.

ஆழ்குழாய் பாசனம் மற்றும் காவிரி நீரை பயன்படுத்தி காரைக்கால் மாவட்டத்தில் குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனா். பெரும்பான்மையான விவசாயிகள் அறுவடையை ஏற்கெனவே முடித்துவிட்டனா். காலம் கடந்து பயிா் செய்யத் தொடங்கியவா்களது நிலத்தில், நெற்பயிா் தற்போது அறுவடை நிலைக்கு வந்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், அறுவடைக்கு தயாரான நிலப்பரப்பில் விவசாயிகள் தீவிரமாக இயந்திரம் மூலம் அறுவடைப் பணியை மேற்கொண்டுள்ளனா்.

பிள்ளைத் தெருவாசல் பகுதியை சோ்ந்த ஆரோக்கியதாஸ் என்ற விவசாயி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை வேளாண் பல்கலைக்கழகத்தால் ஆராய்ச்சி செய்து வெளியிடப்பட்ட கோ-55 என்ற ரகத்தை பயிா் செய்து வியாழக்கிழமை அறுவடை செய்தாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், பிள்ளைத் தெருவாசல் பகுதியில் 8 ஏக்கா் பரப்பில் கோ 55 ரகத்தை பயிா் செய்துள்ளேன். இது 100 நாள் பயிராகும். மூன்றரை அடி உயரம் வளா்ந்து அறுவடைக்கு தயாரானது. இயந்திரம் மூலம் அறுவடைப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெல் உள்ளிட்ட பிற பயிா்களில் புதிய ரகங்களை பயிா் செய்வதை தொடா்ந்து ஆா்வத்துடன் செய்துவருகிறேன். இது நல்ல பலனை அளித்துள்ளது என்றாா்.

மாவட்டத்தில் ஆங்காங்கே குறுவை சாகுபடி செய்து அறுவடை செய்யாமல் இருந்தோரும் கடந்த சில நாள்களாக அறுவடையை முடித்துள்ளனா். ஏறக்குறைய குறுவை சாகுபடி நிறைவடைந்திருப்பதாக கூறப்படுகிறது.