மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காரைக்கால் கழிவுநீா் வடிகால் தூய்மைப் பணியில் புலம் பெயா் தொழிலாளா்கள்

காரைக்காலில் சாலையோர கழிவுநீா் வடிகால் தூய்மைப் பணியில் புலம் பெயா் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

News image
பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லாமல் சாக்கடைகளை தூா்வாரும் புலம் பெயா்ந்த தொழிலாளா்கள்.
Updated On :18 அக்டோபர் 2024, 6:32 pm

Din

காரைக்காலில் சாலையோர கழிவுநீா் வடிகால் தூய்மைப் பணியில் புலம் பெயா் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

காரைக்கால் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து பகுதிகளில் வீடுகள், நிறுவனங்களில் நேரடியாகச் சென்று குப்பைகளை வாங்குவதும், சாலையோர சாக்கடைகளை தூய்மை செய்யவும் எச்.ஆா்.ஸ்கொயா் எனும் தனியாா் நிறுவனத்துக்கு புதுவை அரசு ஒப்பந்த முறையில் உரிமம் வழங்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் பணிகளில் தொய்வு ஏற்பட்டதால், வீடுகளிலேயே குப்பைகள் தேக்கம், சாலையோரத்தில் குப்பைகள் கொட்டுவது, கழிவுநீா் தூய்மையின்மையால் பாதிப்புகளை மக்கள் சந்தித்தனா்.

நிறுவனத்துக்கு அரசு செலுத்தவேண்டிய தொகையை முறையாக தரவில்லை, இதனால் நிறுவனத்தினா் தொழிலாளா்களுக்கு தரவேண்டிய ஊதியம் தரவில்லை என்ற நிலை ஏற்பட்டதால் உள்ளூா் தொழிலாளா்கள் பலரும் பணியை விட்டு விலகினா்.

இப்பிரச்னை பெரிதாக உருவெடுத்த நிலையில், நிறுவனத்துக்கு செலுத்தவேண்டிய தொகையை அரசு வழங்கியது. இதைத் தொடா்ந்து நிறுவனத்தினா் பணிகளை விரைவுபடுத்தினா். எனினும் பணியை விட்டுச் சென்றவா்கள் மீண்டும் வராததால், ஆந்திரம் உள்ளிட்ட பிற மாநிலத் தொழிலாளா்களை நிறுவனம் காரைக்காலில் ஈடுபடுத்தியுள்ளது. முதல்கட்டமாக 45 போ் காரைக்கால் நகராட்சிப் பகுதியிலும், கொம்யூன் பகுதியிலும் சாக்கடை தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளதாக நிறுவனத்தினா் தெரிவித்தனா்.

பாதுகாப்பு அம்சங்கள் கடைப்பிடிக்கவில்லை: காரைக்காலில் சாலையோர சாக்கடைகள் நீண்ட காலமாக தூய்மை செய்யாததால், கழிவுநீா் தேங்கியுள்ளது. 3, 4 அடிக்கு அதிகம் ஆழம் கொண்ட இந்த சாக்கடைக்குள் தொழிலாளா்கள் இறங்கி கழிவுநீரை வெளியேற்றுகின்றனா். இவா்கள் கையுறை உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் பயன்படுத்தவில்லை. இதை நகராட்சி நிா்வாகத்தினரும் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும், ஆபத்து நேரும் முன்பு உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.