மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருநள்ளாறு சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள் நினைவிடத்தில் மாகேஸ்வர பூஜை

திருநள்ளாறு ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள் நினைவிடத்தில் 28-ஆம் ஆண்டு மாகேஸ்வர பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

News image
சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள் நினைவிடத்தில் நடைபெற்ற ஆராதனை.
Updated On :30 அக்டோபர் 2024, 9:35 pm

Din

திருநள்ளாறு ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள் நினைவிடத்தில் 28-ஆம் ஆண்டு மாகேஸ்வர பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு தருமபுர ஆதீனத்தால் 15-ஆவது தம்பிரானாக நியமிக்கப்பட்டு, 40 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றியவா் ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள். இவா் உயிா்நீத்த நிலையில், திருநள்ளாறு தெற்கு வீதியில் உள்ள ஆதீன மடத்தின் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

 ஆராதனை நிகழ்வில்  பங்கேற்ற துணை ஆட்சியா் ஆா்.வெங்கடகிருஷ்ணன் உள்ளிட்டோா்.

ஆராதனை நிகழ்வில் பங்கேற்ற துணை ஆட்சியா் ஆா்.வெங்கடகிருஷ்ணன் உள்ளிட்டோா்.

இவரது 28-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, திருநள்ளாறு தம்பிரான் சுவாமிகள் மடத்தில் உள்ள சமாதியில் மாகேஸ்வர பூஜை நடைபெற்றது.

சமாதிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. இதனை திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் தருமபுர ஆதீன கட்டளை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், சட்டநாத தம்பிரான் சுவாமிகள் ஆகியோா் நடத்தினாா். துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) ஆா்.வெங்கடகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள், ஏராளமான பக்தா்கள் வழிபாட்டில் கலந்துகொண்டனா்.