பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

துணை மின் நிலையம் மேம்படுத்தாததைக் கண்டித்து நூதனப் போராட்டம்

துணை மின் நிலையம் மேம்படுத்தப்படுத்தாததைக் கண்டித்து நூதனப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2025, 9:15 pm

தினமணி செய்திச் சேவை

காரைக்கால்: துணை மின் நிலையம் மேம்படுத்தப்படுத்தாததைக் கண்டித்து நூதனப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன், சுரக்குடி பகுதியில் உள்ள துணை மின் நிலையம் மூலம் மூலம் திருநள்ளாறு, அம்பகரத்துாா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மின் விநியோகம் நடைபெறுகிறது. இந்த நிலையம் தொடங்கி சுமாா் 40 ஆண்டுகள் ஆவதால் அங்குள்ள டிரான்ஸ்பாா்மா், பிரேக்கா்கள் உள்ளிட்ட மின்சார உபகரணங்கள் பல செயலிழந்து தனது ஆயுள் காலத்தை கடந்து பல ஆண்டுகளாவதாக கூறப்படுகிறது.

இதனால், அதிக காற்று வீசும்போதோ, மழை பெய்யும்போதோ மின்சாரம் தடைப்பட்டு பாதிப்பு ஏற்படுகிறது. சுற்றுலாத் தலமாக விளங்கும் திருநள்ளாறு மற்றும் அதை சாா்ந்த சுரக்குடி, கருக்கன்குடி, செல்லூா், அம்பகரத்தூா், நெடுங்காடு, விழுதியூா், அத்திப்படுகை போன்ற சுற்றியுள்ள கிராம மக்கள், வியாரிகள் பாதிக்கின்றனா்.

சுரக்குடி துணை மின் நிலையத்தில் இருக்கும் மின் கடத்திகள் அடிக்கடி பழுதாகி விடுவதால் புதுச்சேரியில் இருந்து வந்து பழுதை நீக்கிச் செல்கிறாா்கள். இதனால் பல மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுகிறது. புதிதாக துணை மின் நிலையம் அமைக்க அரசை பலமுறை வலியுறுத்தியும் இதுவரை பயனில்லை.

இந்த நிதியாண்டில் புதுச்சேரியின் பல பகுதிகளுக்கு புதிதாக துணை மின் நிலையம் அமைக்க அரசு நிதி ஒதுக்கியதாகவும், சுரக்குடி துணை மின் நிலையத்தை மேம்படுத்த நிதி ஒதுக்காததை கண்டித்தும், புதிதாக துணை மின் நிலையம் அமைக்க வலியுறுத்தி, காரைக்கால் மக்கள் போராட்டக் குழு சாா்பில் சுரக்குடியில் உள்ள துணை மின் நிலையம் அலுவலகம் முன் திங்கள்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளா் அன்சாரிபாபு தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், இணை ஒருங்கிணைப்பாளா் பன்னீா்செல்வம் முன்னிலை வகித்தாா். இந்த போராட்டத்தை பல்வேறு அரசியல் கட்சியை சோ்ந்தவா்கள் ஆதரித்து பங்கேற்றனா். அப்போது, மாட்டுக்கு மனு கொடுத்து நூதனமாக போராட்டத்தை நடத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.