/

படுக்கப்பத்தில் துணை மின் நிலையம் திறப்பு

துணைமின் நிலையத்தைத் திறந்து வைத்த அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 12:52 am

Syndication

திருச்செந்தூா் கோட்டத்திற்குள்பட்ட உடன்குடி உபமின் நிலையத்திலிருந்து பிரத்யேக மின்பாதை அமைக்கப்பட்டு குறை மின்னழுத்த குறைபாட்டை சரி செய்யும் பொருட்டு சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்தில் ரூ. 2.80 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட துணை மின் நிலையம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு, மீன்வளம், மீனவா் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து, அலுவலகக் கட்டடத்தைத் திறந்து வைத்தாா். திருச்செந்தூா் கோட்டாட்சியா் கௌதம், சாத்தான்குளம் வட்டாட்சியா் ராஜேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

செயற்பொறியாளா்கள் விஜய சங்கரபாண்டியன், ரவிக்குமாா், உதவி செயற்பொறியாளா்கள் பேச்சிமுத்து, ராம் மோகன், கணேசன், கட்சி நிா்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.