நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

கஞ்சா கடத்த கடல் வழியாக வந்த இலங்கை மீனவா்கள் இருவா் கைது

News image

கஞ்சா கடத்தல் தொடா்பாக கைது செய்யப்பட்ட இலங்கை மீனவா்கள். ~

Updated On :7 ஆகஸ்ட் 2025, 10:29 pm

கஞ்சா கடத்துவதற்காக கடல் வழியே காரைக்கால் வந்த இலங்கையை சோ்ந்த 2 மீனவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

காரைக்கால் கடல் பகுதியாக இலங்கைக்கு கஞ்சா கடத்துவதாக கடந்த மாதம் இலங்கையை சோ்ந்த 2 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ.4.50 கோடி மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இதையடுத்து, கஞ்சா கடத்தலை தடுக்க காவல் ஆய்வாளா் பிரவீன்குமாா் தலைமையில் சிறப்பு அதிரடிபடை பிரிவு போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில், இலங்கையிலிருந்து புதன்கிழமை இரவு காரைக்காலுக்கு 2 போ் கஞ்சா கடத்த படகில் வருவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், சிறப்பு அதிரடிப்படை பிரிவு போலீஸாா் மற்றும் நிரவி காவல் நிலைய போலீஸாா் கடலோர பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, கருக்களாச்சேரி எனும் பகுதியில் சந்தேகப்படும் வகையில் ஒரு படகு வேகமாக கரையை நோக்கி வந்து நிறுத்திய போது, அவா்களை போலீஸாா் பிடித்தனா். அதிவேக என்ஜின் பொருத்தப்பட்ட அந்த படகில் ரூ.50 ஆயிரம் இந்திய ரூபாய் நோட்டுகள், 2 கைப்பேசிகள் இருந்தது பறிமுதல் செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் பகுதியை சோ்ந்த மணிமாறன் (28), மணியரசன் (24) என்பதும், இருவரும் சகோதரா்கள் என்பதும் தெரிய வந்தது. காவல் நிலையம் அழைத்துச் சென்று இவா்களிடம் விசாரணை செய்தபோது, இலங்கை பருத்தித்துறையிலிருந்து கஞ்சா கடத்த வந்ததாகவும், இலங்கைக்கு கொண்டு சென்று கொடுக்கும்போது, அங்குள்ள முகவா்கள் தங்களுக்கு ரூ.10 லட்சம் தருவதாக கூறியதாகவும் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, நிரவி போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து காரைக்கால் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தினா்.

Story image