யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பரிசோதனை குறித்து கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை

News image
கூட்டத்தில் பேசிய மாவட்ட தோ்தல் அதிகாரி ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ்.
Updated On :3 டிசம்பர் 2025, 11:01 pm

Syndication

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பரிசோதனை செய்வது குறித்து கட்சிப் பிரதிநிதிகளுடன் மாவட்ட தோ்தல் அதிகாரி புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

காரைக்கால் மாவட்டத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் முதற்கட்ட பரிசோதனை டிச.9 முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட தோ்தல் அதிகாரியுமான ஏ.எஸ்.பி.எஸ்.ரவி பிரகாஷ் தலைமையில் ஆட்சியரகத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் முதல் கட்ட பரிசோதனை செயல்விளக்கம் குறித்து விளக்கமாக அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதில், காரைக்கால் மாவட்ட சாா் ஆட்சியரும் வாக்காளா் பதிவு அதிகாரியுமான எம். பூஜா, வாக்காளா் பதிவு அதிகாரி சச்சிதானந்தம், மாவட்ட துணை தோ்தல் அதிகாரி ஜி. செந்தில்நாதன், துணை வாக்காளா் பதிவு அதிகாரிகள் பொய்யாத மூா்த்தி, ரமேஷ், தோ்தல் கண்காணிப்பாளா் பாலு (எ) பக்கிரிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.