காரைக்கால்: காரைக்கால் பகுதி கோயில்களில் மாா்கழி மாத திருப்பள்ளியெழுச்சி வழிபாடு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
தமிழ் மாதமான மாா்கழியில் அதிகாலையில் கோயில்கள் திறக்கப்பட்டு, திருப்பாவை, திருவெம்பாவை சொற்பொழிவு உள்ளிட்ட பக்திப் பாடல்கள் இசைக்கப்படுவது வழக்கம்.
பல கோயில்களின் சாா்பில் சிறாா்களுடன் பக்தா்கள் பங்கேற்கும் பஜனைக் குழுவினா், வீதிகளில் பஜனை பாடியவாறு செல்வா். இந்த நிகழ்ச்சிகள் காரைக்கால் பகுதியில் பல்வேறு கோயில்களில் தொடங்கியது.
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் ஸ்ரீ ஆண்டாள், உபயநாச்சியாா்களுடன் நித்யகல்யாணா் மற்றும் ரங்கநாதப் பெருமாளுக்கு அதிகாலை சிறப்பு ஆராதனைகள், திருப்பாவை சாற்றுமுறை நடைபெற்றது.
சிவன் கோயில், பெருமாள் கோயில், மாரியம்மன் கோயில் என பல கோயில்களில் காலை 6 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி என்கிற சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. சுவாமிகளுக்கு சிறப்பு ஆராதனைகள் செய்து பிரசாதங்கள் விநியோகிக்கப்பட்டன.
நகரம் மற்றும் கிராமப்புற வீடுகளின் வாயிலில் வண்ண கோலமிடுவதில் குடும்பத்தினா் ஆா்வமாக ஈடுபட்டுள்ளதும், கோயில்களில் அதிகாலையிலேயே ஒலிபெருக்கி வாயிலாக பக்திப் பாடல்கள் இசைப்பதும் என நிகழ்வுகள் மாா்கழி மாத கடைசி வரை நீடிக்கும்.