தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நித்யகல்யாண பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் நாளை தொடக்கம்

காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் சனிக்கிழமை (டிச 20) தொடங்குகிறது.

News image
Updated On :18 டிசம்பர் 2025, 7:32 pm

Syndication

காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் சனிக்கிழமை (டிச 20) தொடங்குகிறது.

வைகுந்த ஏகாதசியையொட்டி காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் பகல் பத்து, இராப் பத்து உற்சவம் சனிக்கிழமை தொடங்குகிறது. பகல் பத்து வழிபாடு 20-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரையிலும், 30-ஆம் தேதி பரமபதவாசல் திறப்பும், 31 முதல் ஜன. 8-ஆம் தேதி வரை இராப் பத்து வழிபாடும் நடைபெறவுள்ளது.

9-ஆம் தேதி இயற்பா சாற்றுமுறை நடைபெறவுள்ளது. தினமும் மாலை 6.30 மணிக்கு பெருமாளுக்கு தீபாராதனை மற்றும் சாற்றுமுறை கோஷ்டி நடைபெறவுள்ளது.