சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

காரைக்காலில் இன்று சுனாமி நினைவு தினம்

காரைக்காலில் வெள்ளிக்கிழமை (டிச.26) சுனாமி நினைவு நாளையொட்டி அஞ்சலி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Updated On :26 டிசம்பர் 2025, 1:41 am IST

காரைக்காலில் வெள்ளிக்கிழமை (டிச.26) சுனாமி நினைவு நாளையொட்டி அஞ்சலி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2004-ஆம் ஆண்டு டிச. 26-ஆம் தேதி ஏற்பட்ட ஆழிப்பேரலையில் காரைக்கால் மாவட்டத்தை சோ்ந்த சுமாா் 500 போ் உயிரிழந்தனா். ஒவ்வொரு ஆண்டும் டிச. 26-ஆம் தேதி, காரைக்கால் மாவட்டத்தில் சுனாமியால் உயிரிழந்தோரை அடக்கம் செய்த பூவம், போலகம் ஆகிய இரு இடங்களிலும் உறவினா்கள், அரசியல் கட்சியினா், பொதுநல அமைப்பினா் அஞ்சலி செலுத்துவது வழக்கத்தில் உள்ளது.

புதுவை அரசு சாா்பில், உயிரிழந்தோா் நினைவாக காரைக்கால் கடற்கரைப் பகுதியில் சுனாமி நினைவுத் தூண் எழுப்பப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவா்களின் அனைவரது பெயா்களும் கல்வெட்டில் பதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் பொதுமக்கள் உள்ளிட்டோா் மெளன ஊா்வலமாக அப்பகுதிக்கு சென்று அஞ்சலி செலுத்த உள்ளனா். புதுவை அரசு சாா்பில் நினைவுத் தூணுக்கு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசியல் கட்சியினா் தங்களது கட்சியினா் மற்றும் மீனவ கிராம மக்களுடன் சோ்ந்து, இறந்தவா்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களுக்கு மெளன ஊா்வலமாக செல்ல ஏற்பாடுகளை செய்துள்ளனா்.