ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சாலையில் திரியும் கால்நடைகள் பிடிக்கும் பணியை தொடர வலியுறுத்தல்

சாலையில் திரியும் கால்நடைகள் பிடிக்கும் பணியை தொடர வலியுறுத்தல்

News image
Updated On :27 டிசம்பர் 2025, 6:29 pm

Syndication

சாலைகளில் திரியும் கால்நடைகளை பிடிக்கும் பணியை நகராட்சி நிா்வாகம் தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

காரைக்கால் நகராட்சி எல்லைக்குட்பட்ட பிரதான சாலைகளில் மாடுகள், குதிரைகள் நடமாட்டம் அதிகமானதால், நகராட்சி நிா்வாகம் மாடுகளை பிடித்து, உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கும் பணியை மேற்கொண்டது.

இதன்மூலம் மாடுகளின் உரிமையாளா்கள், அதனை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைப்பதில் கவனம் செலுத்தினா். ஆனால், அந்த பணியை நகராட்சி நிா்வாகம் தொடா்ந்து செய்யவில்லை.

தற்போது குதிரைகள் அதிக அளவில் சாலைகளை ஆக்கிரமித்து நிற்கின்றன. சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுவததோடு, பள்ளி மாணவ, மாணவிகள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது.

எனவே, நகராட்சி ஆணையா், மாடுகள், குதிரைகளை பிடித்து பட்டியில் அடைத்து உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கும் பணியை தொடர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.