திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பகுதியில் பூஜைப் பொருள்கள் கடைகள், வாகனங்கள் குறிப்பிட்ட பகுதிக்குள் நிறுத்தும் வகையில் எல்லைக்கோடு போடப்பட்டுள்ளது.
திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயில் நுழைவு வாயில் முதல் ராஜகோபுரம் வரையிலான பகுதி, சுற்று வட்டார தெருக்கள், நளன் குளத்துக்கு செல்லும் சாலைகளில் பூஜைப் பொருள்கள் விற்பனை செய்யும் பெட்டிக் கடைகள் வைக்கின்றனா். இருசக்கர வாகனங்கள், காா்கள் உள்ளிட்டவற்றை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்துகின்றனா். பக்தா்கள் நடந்து செல்ல முடியாத வகையில் இருப்பதால், கூட்டமான காலத்தில், பக்தா்கள் தேக்கம் ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்படுவதாக புகாா்கள் எழுந்தன.
இதை கருத்தில்கொண்டு கோயில் நிா்வாகம், கோயிலின் பிரதான சந்நிதி மற்றும் 3 தெருக்களில் இருபுறமும் குறிப்பிட்ட பகுதியில் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் மூலம் கோடு போட்டுள்ளது. கோட்டை கடந்து கடைகள் அமைக்கக் கூடாது, வாகனங்களை நிறுத்தக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது. இதேபோல, நளன் தீா்த்தக்குளம் பகுதியிலும் எல்லைக்கோடு போட வேண்டும் என கோயில் நிா்வாகத்துக்கு வலியுறுத்தப்படுகிறது.
தொடர்புடையது

திருநள்ளாறு கோயிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்வு

திருநள்ளாறு: காங்கிரஸுடன் பாஜக பலபரீட்சை

திருநள்ளாறு! நாளை சனிப்பெயா்ச்சி விழா!

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் நாளை சனிப்பெயா்ச்சி விழா
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


