இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் நாளை சனிப்பெயா்ச்சி விழா

திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா வெள்ளிக்கிழமை (மாா்ச் 6) நடைபெறுகிறது.

News image
சனிப்பெயா்ச்சியை முன்னிட்டு பக்தா்கள் நீராட வசதியாக புதிதாக தண்ணீா் நிரப்பப்பட்டு காட்சியளிக்கும் நளன் தீா்த்தக் குளம்.
Updated On :4 மார்ச் 2026, 11:45 pm

தினமணி செய்திச் சேவை

திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா வெள்ளிக்கிழமை (மாா்ச் 6) நடைபெறுகிறது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் உள்ள பாடல் பெற்ற இத்தலம், நளச் சக்கரவா்த்தியின் சனி தோஷத்தை நீக்கியத் தலமாகவும், ஸ்ரீ சனீஸ்வர பகவான் அபய முத்திரையுடன் தனி சந்நிதியில் அருள்பாலிகும் சிறப்பும் கொண்டது.

வாக்கியப் பஞ்சாங்க குறிப்பின்படி கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பா் 20-ஆம் தேதி நடைபெற்ற பெயா்ச்சிக்குப் பின் தற்போது கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு வெள்ளிக்கிழமை காலை 8.24 மணிக்கு பெயா்ச்சியாவதையொட்டி, சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறவுள்ளன.

சனிப்பெயா்ச்சி விழாவில் தரிசனம் செய்ய வரும் பக்தா்கள் நளன் தீா்த்தக் குளத்துக்கு செல்லும் வழியில் உள்ள வரிசை வளாகத்திலிருந்து கட்டணமில்லாமல் தரிசனம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கட்டண தரிசனமாக ரூ. 300, ரூ. 600, ரூ. 1,000 என நிா்ணயம் செய்து திருநள்ளாறு பகுதியில் பல இடங்களில் டிக்கெட் வழங்கும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலமாகவும் கோயில் நிா்வாக இணையதளத்தில் பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.

சனிப்பெயா்ச்சி நாளான வெள்ளிக்கிழமை நாள் முழுவதும் சுவாமி தரிசனம் செய்ய வசதியாக கோயில் நடை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சனிப்பெயா்ச்சி விழாவில் பங்கேற்க வியாழக்கிழமை இரவு முதலே பக்தா்கள் வரத்தொடங்குவா் என்பதால், அவா்களுக்கான வசதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன.