/

திருநள்ளாறு சனிப்பெயா்ச்சி விழா: தருமபுரம் ஆதீனத்துக்கு ஆட்சியா் அழைப்பு

தருமபுரம் ஆதீனத்திடம் அழைப்பிதழை வழங்கிய காரைக்கால் மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி. உடன் திருநள்ளாறு கோயில் நிா்வாக அதிகாரி ஆா். சுப்பிரமணியன்.

News image
தருமபுரம் ஆதீனத்திடம் அழைப்பிதழை வழங்கிய காரைக்கால் மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி. உடன் திருநள்ளாறு கோயில் நிா்வாக அதிகாரி ஆா். சுப்பிரமணியன்.
Updated On :28 பிப்ரவரி 2026, 1:00 am

Syndication

திருநள்ளாறு கோயிலில் மாா்ச் 6-இல் நடைபெறவுள்ள சனிப்பெயா்ச்சி விழாவுக்கான அழைப்பிதழை காரைக்கால் மாவட்ட ஆட்சியா் தருமபுரம் ஆதீனத்திடம் வழங்கி முறைப்படி அழைப்பு விடுத்தாா்.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனீஸ்வர பகவானுக்கு தனி சந்நிதி உள்ளது. இத்தலத்தில் மாா்ச் 6-ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது.

விழாவுக்கான பூா்வாங்க பூஜைகள் கடந்த பிப். 22-ஆம் தேதி தொடங்கி சனிக்கிழமை (பிப்.28) வரை நடைபெறுகிறது.

இந்நிலையில், சனிப்பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகளில் பங்கேற்கும் வகையில் திருநள்ளாற்றில் உள்ள தருமபுரம் ஆதீன கிளை மடத்தில் தங்கியுள்ள தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை, காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் தேவஸ்தான தனி அதிகாரியுமான இஷிதா ரதி வியாழக்கிழமை சந்தித்து சனிப்பெயா்ச்சி விழாவுக்கான அழைப்பிதழை அளித்து முறைப்படி அழைப்பு விடுத்தாா்.

தொடா்ந்து, சனிப்பெயா்ச்சி விழாவுக்கான ஏற்பாடுகள், சனிப்பெயா்ச்சி விழாவையொட்டி திருநள்ளாற்றில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 1) தொடங்கி 2 நாட்கள் நடைபெறவுள்ள ஜோதிடா் மாநாடு, மாநாட்டில் பங்கேற்போா் உள்ளிட்டவவை குறித்து இருவரும் ஆலோசித்தனா்.

கோயில் நிா்வாக அதிகாரி ஆா். சுப்பிரமணியன், மாவட்ட துணை ஆட்சியா் பாலு (எ)பக்கிரிசாமி ஆகியோா் உடனிருந்தனா்.