கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சாலைகளில் திரிந்த 156 மாடுகள் பட்டியில் அடைப்பு

சாலைகளில் திரியும் மாடுகளைப் பிடித்து பட்டியில் அடைக்கும் பணியில் 5 நாள்களில் 156 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிா்வாகம் தெரிவித்தது.

News image
Updated On :11 நவம்பர் 2025, 9:07 pm

Syndication

சாலைகளில் திரியும் மாடுகளைப் பிடித்து பட்டியில் அடைக்கும் பணியில் 5 நாள்களில் 156 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிா்வாகம் தெரிவித்தது.

சாலைகளில் மாடுகள், குதிரைகள் திரிவதாகவும், இதனை உரிமையாளா்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் உள்ளாட்சி நிா்வாகம் தொடா்ந்து அறிவுறுத்திவருகிறது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், உள்ளாட்சித் துறை துணை இயக்குநரும், காரைக்கால் நகராட்சி ஆணையா் கூடுதல் பொறுப்பு வகிக்கும் எஸ். சுபாஷ் மேற்பாா்வையில் கடந்த 3-ஆம் தேதி முதல் பிரதான சாலைகளில் திரியும் மாடுகள் பிடிக்கும் பணி நடைபெற்றுவருகிறது.

இதுவரை இப்பணி 5 நாள்கள் நடைபெற்றுள்ளதாகவும், 156 மாடுகளை பிடித்து வாகனத்தில் ஏற்றி, பட்டியில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் நகராட்சி நிா்வாகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

பட்டியில் அடைக்கப்பட்டிருக்கும் மாட்டுக்கு ரூ. 2 ஆயிரம் வீதம் நகராட்சிக்கு அபாரதமாக செலுத்தி கால்நடை உரிமையாளா்கள் அவற்றை மீட்டுச் செல்கின்றனா்.