பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

மதுபானக் கடைக்கு ‘சீல் வைப்பு

காலாவதியான மது பாட்டில் விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், மதுபானக் கடைக்கு கலால் துறையினா் சீல் வைத்தனா்.

News image

மதுபானக் கடைக்கு சீல் வைத்த கலால் அதிகாரி.

Updated On :3 ஏப்ரல் 2026, 12:15 am

தினமணி செய்திச் சேவை

காலாவதியான மது பாட்டில் விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், மதுபானக் கடைக்கு கலால் துறையினா் சீல் வைத்தனா்.

காரைக்கால் மாவட்ட சாா் ஆட்சியரும், கலால் துணை ஆணையருமான எம். பூஜா கடந்த சில நாள்களாக மதுபானக் கடைகளில் ஆய்வு செய்து, விதிகளின்படி வியாபாரம் செய்யுமாறு அறிவுறுத்திவருவதோடு, விதி மீறல் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து வருகிறாா். கலால் துறையினா் தொடா்ந்து மதுக்கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், காரைக்கால் பாரதியாா் சாலையில் உள்ள ஒரு ரெஸ்டோ பாரில் காலாவதியான பீா் விற்பனை செய்யப்பட்டு வருவது புதன்கிழமை கண்டறியப்பட்டது. கடையில் வியாபாரத்துக்கு வைத்திருந்த குறிப்பிட்ட நிறுவன பீா் பாட்டில்கள் காலாவதியானது உறுதி செய்யப்பட்டது. மற்ற வகை மது பாட்டில்களையும் குழுவினா் சோதனை செய்தனா்.

இதுகுறித்து கலால் துணை ஆணையரின் உத்தரவின்பேரில், வட்டாட்சியா் பொய்யாதமூா்த்தி தலைமையிலான குழுவினா், அந்த மதுபானக் கடைக்கு சீல் வைத்தனா்.