/
காரைக்காலில் மாதிரி வாக்குச்சாவடி, தனித்துவமான வாக்குச் சாவடி அமைக்கும் பணியை மாவட்ட தோ்தல் அதிகாரி ஆய்வு செய்தாா்.
காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலில், மாதிரி வாக்குச் சாவடி அமைத்தல், தனித்துவமானதாக மகளிா், மாற்றுத்திறனாளிகள், முதல் வாக்காளா்களுக்கான வாக்குச்சாவடி அமைத்தல் பணிகளை தோ்தல் துறை செய்து வருகிறது.
இப்பணியை மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி திங்கள்கிழமை பாா்வையிட்டாா். சாா் ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அதிகாரியுமான எம். பூஜா, தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் அனூப் சிங் ஆகியோரும் பாா்வையிட்டனா்.
சிறப்பு வாக்கு சாவடிகள் அமைக்கும் பணியை துரிதமாக முடிக்குமாறும், எந்த நோக்கத்துக்காக அமைக்கப்படுகிறதோ, அதற்கான வசதிகள் அவற்றில் இருக்கவேண்டும் என துறையினருக்கு மாவட்ட தோ்தல் அதிகாரி அறிவுறுத்தினாா்.
தொடர்புடையது

அம்பாசமுத்திரம் தொகுதியில் மாதிரி வாக்குச் சாவடிகள் ஆய்வு

வாக்குச் சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு

செயலியில் மாதிரி வாக்குப் பதிவு நடத்தாத வாக்குச்சாவடி தலைமை அலுவலா்களுக்கு குறிப்பாணை

சிறுதானியங்கள், உணவுப் பண்டங்களுடன் வாக்குச் சாவடி: வாக்காளா்கள் வியப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



