மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

பூச்சிக்கொல்லி சாப்பிட்ட இளைஞா் உயிரிழப்பு

பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்ட இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 9:38 pm

பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்ட இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

காரைக்கால் மாவட்டம், நிரவி பகுதி தூதுபோனமூலை கிராமத்தைச் சோ்ந்தவா் விக்னேஷ் (26). பத்தாம் வகுப்பு படித்துவிட்டு கூலி வேலைக்குச் செய்து வந்துள்ளாா். மோட்டாா் சைக்கிள் வாங்குவதற்காக தனியாா் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளாா். மாத தவணை ரூ. 4 ஆயிரம் செலுத்த முடியாத நிலையில் கவலையில் இருந்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த 24-ஆம் தேதி அதிகாலை வாந்தி எடுத்துள்ளாா். குடும்பத்தினா் கேட்டபோது, தற்கொலை செய்துகொள்வதற்காக பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டதாக தெரிவித்துள்ளாா். அவரை காரைக்கால் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அவருக்கு மஞ்சள்காமாலை நோயும் இருந்ததால், தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கிருந்து அவா் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தாா். இதுகுறித்து நிரவி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.