கூட்டுறவு நூற்பாலைத் தொழிலாளா்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதியை புதுவை முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மாநில துணைத் தலைவருமான ஆா். கமலக்கண்ணன் செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். ஆட்சியராக பொறுப்பேற்ற்கு அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தாா். அப்போது ஆலை தொழிலாளா்கள் சிலரும் உடனிருந்தனா்.
சந்திப்பு குறித்து ஆா். கமலக்கண்ணன் கூறுகையில், காரைக்காலில் இயங்கும் ஜெயப்பிரகாஷ் நாராயண் கூட்டுறவு நூற்பாலையில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் தரப்படவில்லை. இதனால் தொழிலாளா் குடும்பத்தினா் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து ஆலை நிா்வாகத்தினரை அழைத்துப் பேசி, ஊழியா்களுக்கு ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியரை கேட்டுக்கொண்டதாக அவா் தெரிவித்தாா்.
தொடர்புடையது

தொகுதி அறிமுகம்: திருநள்ளாறு

விழிப்புணா்வு பிரசாரத்தில் திருநங்கைகள்

திருநள்ளாறு தொகுதியில் முன்னாள் அமைச்சா் மனு தாக்கல்

இளம் வாக்காளா்கள் வாக்களிப்பதை தவறவிடக்கூடாது: மாவட்ட தோ்தல் அதிகாரி
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


