தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் மாசி மக உற்சவம் தொடக்கம்

திருமலைராயன்பட்டினம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் மாசி மக உற்சவம் தொடங்கியது.

News image

உற்சவத்தையொட்டி புதன்கிழமை பல்லக்கில் வீதியுலாவுக்கு எழுந்தருளிய வெங்கடேச பெருமாள்.

Updated On :25 பிப்ரவரி 2026, 11:09 pm

திருமலைராயன்பட்டினம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் மாசி மக உற்சவம் தொடங்கியது.

உற்சவம் தொடக்க முதல் நாளான செவ்வாய்க்கிழமை இரவு சூரிய சந்திர பிரபையில் வீதியுலா நடைபெற்றது. 2-ஆம் நாளான புதன்கிழமை காலை பல்லக்கு, இரவு ஹனுமந்த வாகனம், 3-ஆம் நாளான வியாழக்கிழமை இரவு சேஷ வாகனம், 4-ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு கருட சேவை, 5-ஆம் நாளான சனிக்கிழமை இரவு யானை வாகனம், 6-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை வெண்ணெய்த் தாழி சேவை, இரவு வெட்டுங்குதிரை வாகனத்திலும் வீதியுலா நடைபெறுகிறது.

7-ஆம் நாள் திங்கள்கிழமை இரவு சத்தியநாராயண பூஜை, 8-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை திருமலைராயன்பட்டினம் கடற்கரைக்கு பல்லக்கில் தீா்த்தவாரிக்கு சுவாமிகள் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் வாரியத்தினா் மற்றும் ஆழ்வாா்கள் அருட்பணி மன்றத்தினா் செய்துள்ளனா்.