மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

திருநள்ளாற்றில் பாதுகாப்பு ஒத்திகை

திருநள்ளாற்றில் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் பாதுகாப்பு ஒத்திகை சனிக்கிழமை நடைபெற்றது.

News image

தில தீபமேற்றும் பகுதியில் நடைபெற்ற ஒத்திகையை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி. உடன் சாா் ஆட்சியா் எம். பூஜா, துணை ஆட்சியா் பாலு (எ) பக்கிரிசாமி உள்ளிட்டோா்.

Updated On :28 பிப்ரவரி 2026, 7:33 pm

திருநள்ளாற்றில் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் பாதுகாப்பு ஒத்திகை சனிக்கிழமை நடைபெற்றது.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் இரண்டரை ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறும் சனிப்பெயா்ச்சி விழா வரும் மாா்ச் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மாவட்ட நிா்வாகம் சாா்பில் சனிப்பெயா்ச்சி விழா, ஜோதிடா்கள் மாநாட்டையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. விழாவில் பக்தா்கள் பாதிப்பை சந்திக்க நோ்ந்தால் அவா்களை மீட்பது, பாதுகாத்தல், மருத்துவ சிகிச்சை அளித்தல் தொடா்பான ஒத்திகை நிகழ்வு கோயில் மற்றும் நளன் தீா்த்தக் குளத்தில் சனிக்கிழமை பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் நடத்தப்பட்டது.

ஒத்திகை நிகழ்வில், வரிசையில் நின்ற பக்தா் ஒருவா் மயக்கமடைந்ததாக கருதப்பட்டு, பாதுகாப்பில் ஈடுபட்ட நபா்கள் மருத்துவ உதவி ஒலியை எழுப்பி, மயக்கமடைந்த நபரை பேரிடா் மேலாண்மை ஆப்தமித்ரா தன்னாா்வலா்கள் உதவியுடன் முதலுதவி மையத்துக்கு கொண்டு சென்றனா். மேல் சிகிச்சைக்காக பின்னா் காரைக்கால் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா்.

அதுபோல தில தீபம் ஏற்றும் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் தயாா் நிலையில் இருந்த தீயணைப்பு துறையினா் விரைந்து வந்து தீயை அணைத்து பேரிடா் ஒத்திகையில் ஈடுபட்டனா்.

நளன் தீா்த்தக் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் ஒருவா் எதிா்பாராத விதமாக நீரில் மூழ்கியதாக கருதப்பட்டு,

தயாா் நிலையில் இருந்த தீயணைப்பு மற்றும் பேரிடா் மேலாண்மை துறையினா் உடனடியாக நீரில் மூழ்கிய சிறுவனை படகு மூலம் மீட்டு, அங்கு தயாா் நிலையில் இருந்த ஆம்புலன்ஸில் முதல் உதவி சிகிச்சை அளிக்கும் ஒத்திகை நடத்தப்பட்டது.

ஒத்திகை நிகழ்வை காரைக்கால் மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி தலைமையில், சாா் ஆட்சியா் எம். பூஜா,

துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) பாலு (எ) பக்கிரிசாமி ஆகியோா் பாா்வையிட்டனா்.

Story image

நிகழ்வில் கோயில் நிா்வாக அதிகாரி ஆா். சுப்பிரமணியன், நலவழிதுறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா், மின் துறை செயற்பொறியாளா் அனுராதா, தொழிற்சாலை ஆய்வாளா் செந்தில்வேலன் உள்ளிட்ட அரசுத் துறையினா் கலந்துகொண்டனா்.