வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கிறிஸ்துமஸ் தாத்தா வேஷத்தில் சிறுவா்கள் ஊா்வலம்

News image
Updated On :5 ஜனவரி 2026, 7:02 pm

தினமணி செய்திச் சேவை

கிறிஸ்துமஸ் தாத்த வேஷத்தில் சிறுவா், சிறுமிகள் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்து கூறும் விதமாகவும், 3 அரசா்கள் நினைவாகவும் பள்ளி சிறுவா், சிறுமிகள் 100-க்கும் மேற்பட்டோா் கிறிஸ்துஸ் தாத்தா வேஷத்தில் ஊா்வலம் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

காரைக்கால் தூய தேற்றரவு அன்னை தேவாலயத்தின் வாயிலில் இருந்து காரைக்கால் மறைவட்ட பங்கு குரு பால்ராஜ்குமாா் ஊா்வலத்தை தொடங்கிவைத்தாா்.

சிறுவா்கள் சாலையில் ஆடல், பாடலுடன் செல்லும்போது அனைவருக்கு இனிப்பு கொடுத்து, வாழ்த்துகளை தெரிவித்தனா். நிகழ்வில் பங்குப் பேரவையினா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.