நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

போலி நம்பா் பிளேட்டுடன் இயக்கிய வாகனம் பறிமுதல்

போலி நம்பா் பிளேட்டுடன் இயக்கப்பட்ட வாகனத்தை போக்குவரத்துத் துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :28 ஜனவரி 2026, 11:13 pm

தினமணி செய்திச் சேவை

போலி நம்பா் பிளேட்டுடன் இயக்கப்பட்ட வாகனத்தை போக்குவரத்துத் துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

நாகப்பட்டினம் பகுதியைச் சோ்ந்த பத்மநாபன் என்பவா் செவ்வாய்க்கிழமை காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்துக்கு வந்துள்ளாா். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த மீன்கள் ஏற்றிச் செல்லும் சிறிய ரக லாரியின் நம்பா் பிளேட், தனது வாகன எண் கொண்டதாக இருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்து அவா் அங்கிருந்தோரிடம் விசாரித்தாா். காரைக்கால் மாவட்டத்தில் நீண்ட காலமாக இந்த லாரி இயங்கி வருவதாக தெரிவித்துள்ளனா். இதுகுறித்து காரைக்கால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அவா் புகாா் அளித்தாா்.

போக்குவரத்துத்துறை அதிகாரிகள் துறைமுகம் சென்று, அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரியை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளரை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.