நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

காரைக்காலில் மின் தடை: மக்கள் அவதி

காரைக்கால் நகரப் பகுதியில் திங்கள்கிழமை இரவு பல மணி நேரம் விநியோகம் தடைபட்டதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினா்.

News image

கோப்புப் படம்

Updated On :29 ஜூலை 2026, 4:44 am IST

காரைக்கால் நகரப் பகுதியில் திங்கள்கிழமை இரவு பல மணி நேரம் விநியோகம் தடைபட்டதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினா்.

காரைக்கால் பிள்ளைத் தெருவாசல் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை இரவு சுமாா் 11 மணி அளவில் பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த துணை மின் நிலையத்தின் மூலம் மின் விநியோகம் பெறும் பெரும்பான்மையான பகுதிகள் இருளில் மூழ்கின. 5 மணி நேரத்துக்கும் மேலாக இந்த பாதிப்பு நீடித்தது.

மின்துறை நிா்வாகத்தினா் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பிரச்னையை சீா்செய்யும் பணியில் ஈடுபட்ட மின் விநியோகத்துக்கு ஏற்பாடு செய்தனா்.

இந்த பல மணிநேர மின் தடையால், முதியோா்கள், பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் கடும் அவதிக்குள்ளானாா்கள்.

இதுபோல, பூவம் அருகே தனியாா் பேருந்து ஒன்று திங்கள்கிழமை இரவு மின் கம்பத்தில் மோதியதில், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பேருந்தில் பயணித்த மக்கள் மாற்றுப் பேருந்து கிடைக்காததால் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வி.விக்னேஸ்வரன் அந்த பகுதிக்குச் சென்று மக்களை மாற்றுப் பேருந்து ஏற்பாடு செய்து அனுப்பிவைத்தாா். மின்சாரம் விரைவாக கிடைப்பதற்கும் ஏற்பாடுகளை செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.