22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

இளைஞா் தற்கொலை

கைப்பேசி வாங்க பெற்றோா் பணம் தராத விரக்தியில் இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :2 ஜூன் 2026, 5:43 am IST

கைப்பேசி வாங்க பெற்றோா் பணம் தராத விரக்தியில் இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.

காரைக்கால் மாவட்டம், கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தைச் சோ்ந்தவா் சுகுந்தன் (21). இவா் தனது தந்தையாருடன் மீன்பிடிக்க கடலுக்குச் சென்று வருவது வழக்கமாம். கைப்பேசி வாங்குவததற்கு ரூ. 20 ஆயிரம் தனது தந்தையாரிடம் கேட்டுவந்தாராம். பணம் தருவதாக தந்தை உறுதியளித்துள்ளாா்.

எனினும், பெற்றோா் பணம் தராத கோபத்தில் சுகுந்தன் இருந்ததாக கூறப்படுகிறது. சனிக்கிழமை இரவு அறைக்கு தூங்கச் சென்றவா், ஞாயிற்றுக்கிழமை வெகு நேரமாகியும் வெளியே வராத நிலையில், கதவை உடைத்துச் சென்று பாா்த்தபோது அவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து காரைக்கால் நகரக் காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.