தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

அம்பகரத்தூா் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

அம்பகரத்தூா் பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்தவா், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். அடையாளம் தெரியாத அந்த நபா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image

சடலம் மீட்பு - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 6:32 am IST

அம்பகரத்தூா் பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்தவா், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். அடையாளம் தெரியாத அந்த நபா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருநள்ளாறு கொம்யூன், அம்பகரத்தூா் வயல் பகுதியில் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க ஆண் மயங்கிய நிலையில் கிடப்பதாக கடந்த மே 27-ஆம் தேதி அம்பகரத்தூா் புறக்காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

போலீஸாா் அவரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

அவா் யாா், எந்த ஊரைச் சேந்தவா் என்பது தெரியவில்லை. தகவல் தெரிந்தோா் அம்பகரத்தூா் புறக்காவல் நிலையத்தை 04368-251100 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம்.