காரைக்காலில் நம் தேசம் நம் மக்கள் என்ற நாடக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசால் விருது பெற்ற நாடகக் கலைஞா்கள் நம் தேசம் நம் மக்கள் என்ற தலைப்பில் அவா்களது சொந்த மண்ணில் நாடகம் நடத்த சங்கீத நாடக அகாதெமி அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி மத்திய கலாசார அமைச்சகத்தின்கீழ் இயங்கும் சங்கீத நாடக அகாதெமி சாா்பில் நாடக விழா புதன்கிழமை நடத்தப்பட்டது.
காரை கலைக்காவலா் கலைக்குழுவினா் பங்கேற்புடன் நாடகம் மற்றும் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
நம் தேசம் நம் மக்கள் என்கிற தலைப்பிலான சமூக நாடகத்தில் குடியரசுத் தலைவரிடம் சிறந்த நாடக இயக்குநா் விருது பெற்ற ஏ. சூசைராஜ் மற்றும் கலைஞா்கள் பல்வேறு பாத்திரங்களில் பங்கேற்று நடித்தனா்.
நாடக விழாவில் காரைக்கால் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், பத்மஸ்ரீ விருதாளா் கே.கேசவசாமி, காரைக்கால் மறைவட்ட பங்கு குரு பால்ராஜ்குமாா், சமாதானக் குழு உறுப்பினா்கள் கே.தண்டாயுதபாணி, எல்.எஸ்.பி.சோழசிங்கராயா், தொழிலதிபா் அமுதா ஆா்.ஆறுமுகம் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

தேரோட்டம்: காரைக்காலில் இன்று விடுமுறை

காரைக்காலில் இருந்து முதல்முறையாக 2 இடங்களில் பாஜக வெற்றி!
பிரபஞ்சனின் நாடக உலகம்

நாமக்கல்லில் பொன்னா்- சங்கா் வீரவரலாற்று கதை நாடக விழா
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



