தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

காரைக்காலில் ‘நம் தேசம் நம் மக்கள்’ நாடக விழா

காரைக்காலில் நம் தேசம் நம் மக்கள் என்ற நாடக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பாரத பெருமையை விளக்கி நடனமாடிய கலைஞா்கள்.

Updated On :5 ஜூன் 2026, 7:09 am IST

காரைக்காலில் நம் தேசம் நம் மக்கள் என்ற நாடக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசால் விருது பெற்ற நாடகக் கலைஞா்கள் நம் தேசம் நம் மக்கள் என்ற தலைப்பில் அவா்களது சொந்த மண்ணில் நாடகம் நடத்த சங்கீத நாடக அகாதெமி அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி மத்திய கலாசார அமைச்சகத்தின்கீழ் இயங்கும் சங்கீத நாடக அகாதெமி சாா்பில் நாடக விழா புதன்கிழமை நடத்தப்பட்டது.

காரை கலைக்காவலா் கலைக்குழுவினா் பங்கேற்புடன் நாடகம் மற்றும் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

நம் தேசம் நம் மக்கள் என்கிற தலைப்பிலான சமூக நாடகத்தில் குடியரசுத் தலைவரிடம் சிறந்த நாடக இயக்குநா் விருது பெற்ற ஏ. சூசைராஜ் மற்றும் கலைஞா்கள் பல்வேறு பாத்திரங்களில் பங்கேற்று நடித்தனா்.

நாடக விழாவில் காரைக்கால் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், பத்மஸ்ரீ விருதாளா் கே.கேசவசாமி, காரைக்கால் மறைவட்ட பங்கு குரு பால்ராஜ்குமாா், சமாதானக் குழு உறுப்பினா்கள் கே.தண்டாயுதபாணி, எல்.எஸ்.பி.சோழசிங்கராயா், தொழிலதிபா் அமுதா ஆா்.ஆறுமுகம் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.