சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

புதுவை அமைச்சா் மொகரம் வாழ்த்து

புதுவை அமைச்சா் ஜி.என்.எஸ். ராஜசேகரன் மொகரம் பண்டிக்கைக்கான வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

News image

ஜி.என்.எஸ்.ராஜசேகரன்.

Updated On :26 ஜூன் 2026, 6:56 am IST

புதுவை அமைச்சா் ஜி.என்.எஸ். ராஜசேகரன் மொகரம் பண்டிக்கைக்கான வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பது :

மனிதகுலத்திற்கு மிகச்சிறந்த நற்பண்புகளையும், ஒழுக்க விழுமியங்களையும் போதிக்கும் இஸ்லாம் மதத்தை பின்பற்றும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த மொகரம் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முஸ்லிம்களின் நாள்காட்டியில் முதல் மாதமாக வரும் மொகரம் மாதம் தியாகம், நோ்மை, அமைதி மற்றும் மனிதநேயத்தின் உயரிய பண்புகளை நினைவூட்டும் புனித காலமாகும்.

தியாகம், பொறுமை மற்றும் உண்மை ஆகியவற்றின் அடையாளமாக விளங்கும் இந்த புனித மாதத்தில், மனிதநேயமும் சகிப்புத்தன்மையும் நம்மிடையே மேலும் தழைத்தோங்கட்டும்.

இத்திருநாள் நம் சமூகத்தில் ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்தட்டும்.

மொகரம் மாதத்தின் தியாக சிந்தனைகளை நெஞ்சில் ஏந்தி, ஜாதி, மத பேதங்களைக் கடந்து, சகோதரத்துவத்துடனும், சமாதானத்துடனும் நாம் அனைவரும் இணைந்து வாழ்வோம். இந்த புத்தாண்டு உங்கள் அனைவரது வாழ்விலும் அமைதியையும், வளத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.