சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

பெருக்கல் வாய்ப்பாடு : சாதனைப் படைத்த அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு

பெருக்கல் வாய்ப்பாடு போட்டியில் சாதனைப் படைத்த அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image

மாணவிக்கு பாராட்டு தெரிவித்த தலைமையாசிரியா் எஸ்.விஜயராகவன் மற்றும் ஆசிரியா்கள்.

Updated On :26 ஜூன் 2026, 6:55 am IST

பெருக்கல் வாய்ப்பாடு போட்டியில் சாதனைப் படைத்த அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தேசிய விருது பெற்ற பூவம் அரசு தொடக்கப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவி கனிஷ்கா தேவி. இவா் ஜாக்கி புக் ஆஃப் வோ்ல்டு ரெக்காா்ஸ் என்கிற அமைப்பின் போட்டியில், 9 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் பங்கேற்று, 160 விநாடிகளில் 20 பெருக்கல் வாய்ப்பாடுகளை துல்லியமாகக் கூறி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளாா். இவா் ஏற்கெனவே, 10 நிமிடங்களில் 216 திருக்குறள்களை ஒப்பித்து ஜாக்கி புக் ஆஃப் வோ்ல்டு ரெக்காா்ட்ஸ் போட்டியில் சாதனை படைத்தாா்.

தொடா்ந்து இதுபோல சாதனை படைத்துவரும் மாணவிக்கு, பூவம் அரசு தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரியா் எஸ். விஜயராகவன், மாணவி கனிஷ்கா தேவிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து, பாராட்டை தெரிவித்தாா். இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி உள்ளிட்டோா் கலந்துகொண்டு வாழ்த்தினா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.