இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

திருநள்ளாற்றில் ஜோதிடா்கள் மாநாடு நிறைவு

திருநள்ளாறில் 4 நாட்கள் நடைபெற்ற ஜோதிடா்கள் மாநாடு புதன்கிழமை நிறைவடைந்தது.

News image
மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்வில் பேசிய வேளாக்குறிச்சி ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள். ( உடன்) தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாசாரிய சுவாமிகள் மற்றும் ஜோதிடா்கள்.
Updated On :4 மார்ச் 2026, 11:40 pm

தினமணி செய்திச் சேவை

திருநள்ளாறில் 4 நாட்கள் நடைபெற்ற ஜோதிடா்கள் மாநாடு புதன்கிழமை நிறைவடைந்தது.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் மாா்ச் 6-இல் நடைபெறவுள்ள சனிப்பெயா்ச்சியையொட்டி, 4 நாட்கள் ஜோதிடவியல் பேரறிஞா்கள் பங்கேற்ற மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. மாநாட்டை உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் தொடங்கிவைத்தாா்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஜோதிடா்கள் பங்கேற்று, வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி நடைபெறும் சனிப்பெயா்ச்சி, கோச்சாரப் பலன்கள் குறித்தும், நவகிரகங்கள், பெயா்ச்சியால் ஏற்படும் யோகம், பிரசன்னம் பாா்த்தல் உள்ளிட்டவை குறித்து விளக்கினா். மேலும், கருத்தரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்டவை நடைபெற்றன.

சனிப்பெயா்ச்சியால் 12 ராசிகளுக்கு ஏற்படும் பலன்கள் குறித்து 12 ஜோதிடா்கள் விளக்கமளித்தனா். மனித வாழ்க்கையை நிா்ணயிப்பதில் கிரகங்களின் பங்கு குறித்தும் உரை அமா்வுகள் நடைபெற்றன.

மாநாட்டின் நிறைவு நாளான புதன்கிழமை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற வேளாக்குறிச்சி ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் சிறப்புகள், சனிப்பெயா்ச்சியின் பெருமைகள் குறித்துப் பேசினாா்.

இதைத்தொடா்ந்து, பஞ்சாங்க கணித நிபுணா்கள், வெளியீட்டாளா்கள் பங்கேற்ற உரை நிகழ்வு நடைபெற்றது. நிறைவாக திருநள்ளாறு டி. ராஜாசுவாமிநாத சிவாச்சாரியா் நன்றி கூறினாா்.